Thursday, November 5, 2009

பிடித்தது

1.அரசியல் தலைவர்
எனக்கு அரசியலில் பெரும் ஈடுபாடு கிடையாது ... பொதுவாக ....
பிடித்தவர் : ஜெயலலிதா - தன்னம்பிக்கைக்கும் தைரியத்திற்கும்
பிடிக்காதவர்: மு.க. ஸ்டாலின்


2.எழுத்தாளர்
பிடித்தவர் : மறைந்த சுஜாதா அவர்கள் - நான் இவரின் படைப்புகள் நிறைய படித்துள்ளேன். எல்லாமே மிகவும் பிடிக்கும்.

பிடிக்காதவர் : ஞானி -அவர் எழுத்திலேயே திமிர் ரொம்ப அதிகம். அவர் கூறும் கருத்துகள் பிடிக்காது


3.இயக்குனர்
பிடித்தவர் : "பசங்க" பாண்டியராஜ் - மிகவும் அழகான படமாக இருந்தது.

பிடிக்காதவர்: மணி ரத்னம் - ரொம்ப கொழப்பி கொழப்பி, கடைசியில் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு புரியாது. கந்தசாமி பார்த்த பிறகு, சுசி கணேசன்.

4.நடிகர்

பிடித்தவர் : கமல், சூர்யா, ஜெயம் ரவி - இதே வரிசையில்

பிடிக்காதவர் : விஜய், ஷ்யாம், ஸ்ரீகாந்த்


5 . இசையமைப்பாளர்

பிடித்தவர் : ரஹ்மான், இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ்

பிடிக்காதவர் : தேவா, ஸ்ரீகாந்த் தேவா


6. விளையாட்டு வீரர்

பிடித்தவர் : விளையாட்டில் ரொம்ப ஆர்வம் இல்லீங்க, ஆனா, விஷ்வநாத் ஆனந்த் பிடிக்கும்,

பிடிக்காதவர் : இது மட்டும் விட்டுவிடுகிறேன் - பாஸ்



7. பதிவர்

பிடித்தவர் : விக்கி, ஜெகதீஷ் சாம் பெட்ஸி ஜெயா (இதில் பலர் நம்ம தமிழ்நாட்டில் இல்லை... மன்னிக்கவும்)

பிடிக்காதவர் : சிலநேரங்களில் நான் ... அடிக்கடி மறந்து விடுவேன் :)

இந்த தொடர் பதிவுக்கு நான் அழைக்க விரும்புவது
ஜெகதீஷும் சாமும் தான் எனக்கு தெரிந்த தமிழில் பதிவு எழுதுபவர்கள்.... மற்ற நண்பர்கள் எல்லாம் ஆங்கிலம் தான். இவர்கள் இருவரும் ஏற்கனவே எழுதிவிட்டார்கள் ....

விதிமுறை..

1 . பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள் இருந்தாகவீண்டும்.
2. அழைக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தது நான், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் (தற்போதைய) இருக்க வேண்டும்.
4. காரணம் தேவையில்லை, விருப்பம் உள்ளவர்கள் சொல்லலாம்.

Wednesday, October 21, 2009

தமிழ் நாடு அரசு விருதுகள்

சில நாட்கள் முன், தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் விருதுகளின் பட்டியலை படித்தேன் ... முழு நீள நகைச்சுவை தான்
ஏற்கனவே இந்த "பாராட்டு கவியரங்கம்" என்ற பெயரில் கூத்தடித்து போதாது போலும். (வைரமுத்து தொல்லை தாங்கவே முடியாது. மற்றவர்களும், தன்னுடைய தமிழ் ஆர்வத்தை தோண்டி எடுத்துக்கொண்டு வருவார்கள். எவ்வளவு நன்றாக வாசிக்கிறார்களோ, அதற்கு ஏற்ற மாதிரி தானே "சீட்டு")

"உளியின் ஓசை" என்று ஒரு திரைப்படம் வந்ததே பல மக்களுக்கு தெரியாது.
அதற்கு போய் சிறந்த வசனத்திற்கு "நமுக்கு நாமே" திட்டம் போல, "தனக்கு தானே" விருது.
அதே திரைப்படத்திற்கு "சிறந்த நகைச்சுவை நடிகை" விருது கோவை சரளாவிற்கு. என்ன நகைச்சுவை ???
"சுப்ரமணியபுரம்" - அனைவராலும் பாராட்டப்பட்ட அந்த படத்திற்கு ஒரே ஒரு விருது. அதுவும் பின்னணி பாடியவருக்கு மட்டும். இதே மாதிரி சில நல்ல படங்களை மறந்து போயாகிவிட்டது... அப்போ தானே, இவர் படங்களுக்கு இடம் இருக்கும்.
எப்போ பார்த்தாலும், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை விருது, அதில் ஒன்று கமலுக்கும் இன்னும் ஒன்று ரஜினிக்கும். ஹையோ ஹையோ .
திறமையை உக்கப்படுத்த தான் விருதுகள். தன்னையே புகழ்ந்து பாராட்ட அல்ல.
நல்ல கூத்து...


Thursday, October 15, 2009

தீபாவளி வாழ்த்துக்கள்


இல்லத்தில் ஒளியும்
உள்ளத்தில் மகிழ்ச்சியும்
மனதில் உள்ள ஆசைகள் அனைத்தும் நிறைவு பெற...
புத்தாடை அணிந்து
இனிப்பை பகிர்ந்து
இன்பமாய் இந்நாளும், எந்நாளும் அமைய...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Wednesday, July 15, 2009

வணக்கம்

இனி தமிழ் பதிவுகள் இங்கே போடப்படும் ... இதுவரை நான் எழுதிய தமிழ் பதிவுகள் ...

  1. தொடர் பதிவு
  2. நானும் மின்சார ரயில் பயணமும்